திருப்பதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
By: Nagaraj Tue, 15 Sept 2020 9:09:16 PM
ஆழ்வார் திருமஞ்சனம்... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
வருகிற 19-ம் தேதி புரட்டாசி மாத சனிக்கிழமையன்று பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், குங்குமப்பூ உள்ளிட்ட பொருட்களை கலந்து மூலவர் சன்னதி உட்பட அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டது.
பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பகல் 11 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Tags :
devotees |
marriage |