திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை
By: Nagaraj Sat, 26 Dec 2020 8:58:32 PM
கொரோனா சான்று கட்டாயமில்லை... காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று சான்று கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் கூறப்படுவதாவது: சனிபெயர்ச்சி விழா நாளை அதிகாலை நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இதில் தமிழகம், பாண்டிச்சேரி மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது பெருந்தொற்று காரணமாக
பக்தர்களுக்கு கொரோனா சான்று வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில்
கூறியிருந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. இதில் உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதாவது: திருநள்ளாறு
சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமில்லை.
அதே நேரத்தில் விழாவில் கலந்து கொள்ள வருவோருக்கு உடல்வெப்ப பரிசோதனை
நடத்தலாம் என கூறியுள்ளது. இந்த உத்தரவுக்கு பக்தர்கள் மகிழ்ச்சி
தெரிவித்துள்ளனர்.