Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

By: Nagaraj Sun, 13 Dec 2020 8:38:27 PM

ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பக்தர்களுக்கு அனுமதியில்லை... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பின் போது, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், நாளை துவங்குகிறது. இந்த நிகழ்வு ஜனவரி 4ம் தேதி வரை நடக்கிறது. வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, சொர்க்கவாசல் என்ற, பரமபத வாசல் திறப்பு நடைபெறும்.

district administration,trichy,srirangam,devotees,permission ,மாவட்ட நிர்வாகம், திருச்சி, ஸ்ரீரங்கம், பக்தர்கள், அனுமதி

ஆனால் கொரோனா ஊரடங்கால் வரும் 24ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாளான 25ம் தேதி காலை 8 மணி வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய பின், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

பகல் பத்து உற்சவ நாட்களில், நம்பெருமாள் புறப்பாடு நடைபெறும் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய உடன், காலை 8 மணி முதல் முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.ஜனவரி, 1ம் தேதி வேடுபறி உற்சவம் நடக்கும் போது, பகல், 12:30 மணி முதல் மாலை, 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :
|