விரதம் இருந்து அறுபடை வீடுகளில் தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன்கள்
By: Nagaraj Fri, 08 May 2020 7:27:57 PM
முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து அறுபடை வீடுகளில் தரிசனம் செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாமிமலை (திருஏரகம்)
தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
திருப்பரங்குன்றம்
இங்கு பரம்பொருளை விரதம் இருந்துவழிபட்டால் திருமணம் நடைபெறும்.
திருச்சரலைவாய் (திருச்செந்தூர்)
இங்கு முருகப்பெருமானை, விரதம் இருந்துகடலில் நீராடி, பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.
திரு ஆவினன்குடி (பழனி)
ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், தெளிந்த ஞானம் கிடைக்கும்.
சுவாமிமலை (திருஏரகம்)
தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
திருத்தணிகை (குன்று தோராடல்)
குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை முருகனை விரதம் இருந்து வழிபட்டால், மனதிலிருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.
பழமுதிர்ச்சோலை
இங்குள்ள முருகனை விரதம் இருந்து வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனையில் நீராடுதல் மிகவும் சிறப்பு. தன்னை வழிபட்டவருக்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார்.