Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சிதம்பரம் கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ள நீரால் மக்கள் அதிர்ச்சி

சிதம்பரம் கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ள நீரால் மக்கள் அதிர்ச்சி

By: Nagaraj Fri, 04 Dec 2020 8:56:40 PM

சிதம்பரம் கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ள நீரால் மக்கள் அதிர்ச்சி

இதுபோன்ற மழையை பார்த்தது இல்லை என்று சிதம்பரம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாக்கிய புரெவி புயல், மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது.

temple,heavy rain,flood,rainwater,chidambaram ,கோவில், கனமழை, வெள்ளம், மழைநீர், சிதம்பரம்

இதன்காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 34 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. அங்குள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.

கடந்த 45 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை பார்த்தது இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அந்தளவிற்கு மழை பெய்துள்ளது. இதனால் மக்களின் சகஜ வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|