Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய அனுமதி

திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய அனுமதி

By: Nagaraj Wed, 30 Dec 2020 7:27:21 PM

திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய அனுமதி

20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு... உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில், மாதம் தோறும் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும்.

devotees,corona,prevention rules,booking,permission ,பக்தர்கள், கொரோனா, தடுப்பு விதிமுறைகள், முன்பதிவு, அனுமதி

அதன்படி, வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 4 -ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினசரி 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்றும், அதற்கான டிக்கெட்டுகளை www.tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்கள் திருமலைக்கு வரவேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|