Advertisement

நீங்கள் அறிந்து கொள்ள சில ஆன்மீக குறிப்புகள்!!!

By: Nagaraj Mon, 07 Dec 2020 08:15:20 AM

நீங்கள் அறிந்து கொள்ள சில ஆன்மீக குறிப்புகள்!!!

பயன் உள்ள சில ஆன்மீக குறிப்புகளின் தொகுப்பு உங்களுக்காக இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் வீட்டின் ஒரு முக்கிய பங்கை வகிப்பது பூஜை அறை. பூஜை அறையில் நாம் பலவிதமான கடவுளின் படங்களை வைத்திருப்போம். சுவாமி படங்களை மட்டுமல்லாது பூஜை அறையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.

கோயிலிலோ வீட்டு வாசலிலோ சூடம் ஏற்றும் போது காற்றினால் அணைந்து போகாமல் இருக்க சூடத்தை கையால் பொடி செய்துவிட்டு பிறகு பற்ற வைத்தால் அணையாமல் அழகாக எரியும். பூஜையறையில் உள்ள சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் சிறியதாக முத்துப் போல் வைக்க முடியாமல் போனால் ஒரு குச்சியில் சிறிது பஞ்சை சுற்றி வைத்து அதனால் குங்குமம் மஞ்சளை ஒத்தி எடுத்து படத்தில் வைத்தால் அழகாக முத்து போலவே இருக்கும்.

spirituality,prayer room,gooseberry,archana,prayer period ,ஆன்மீகம், பூஜையறை, நெல்லிமரம், அர்ச்சனை, பூஜை காலம்

பூஜையறையில் உள்ள கண்ணாடி பிரேமிட்ட சுவாமி படங்களுக்கு வேப்ப எண்ணெய் சிறிது பஞ்சில் நனைத்து அந்த கண்ணாடியில் துடைத்தால் பூச்சி அரிக்காது. படங்கள் பளபளவென மின்னும்.
நெல்லி மரம் உள்ள வீட்டை தீமைகள் அணுகாது.

நெல்லி இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்து நல்ல பலனும் கிடைக்கும். பூஜை காலத்தில் நாம் ஆண் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டும் போது (உதாராணமாக முருகர் கிருஷ்ணர்) கீழிருந்து மேலாகவும் பெண் தெய்வங்களுக்கு (துர்கை லஷ்மி) மேலிருந்து கீழாகவும் தீபம் காட்ட நன்மை நடக்கும்.

Tags :