திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை குறித்து அறிவிப்பு
By: Nagaraj Tue, 29 Sept 2020 5:46:52 PM
உண்டியல் காணிக்கை குறித்து அறிவிப்பு... சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 91.95 லட்சம் ரொக்கம், 2 .4 கிலோ தங்கம், 2 .8 கிலோ வெள்ளி கிடைக்கப்பெற்றன.
திருச்சி மாவட்டம், சமயபுரம் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை கோவிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர்
அசோக்குமார் தலைமையில் தன்னார்வலர்கள், பத்மா சேவா சங்கம், கோயில்
பணியாளர்கள் எண்ணினர்.
அப்போது ரூ. 91 லட்சத்து 95 ஆயிரத்து 048 ரொக்கமும்,
2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 வெள்ளியும், 31 அயல்நாட்டு
நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் அசோக்குமார்
தெரிவித்துள்ளார்.