Advertisement

கரும் புள்ளிகள் மாறி முகம் பளபளப்பாக மாற..!

By: Monisha Sat, 24 Oct 2020 11:31:41 AM

கரும் புள்ளிகள் மாறி முகம் பளபளப்பாக மாற..!

கரும் புள்ளிகள் மாறி முகம் பளபளப்பாக மாற சில எளிய வழிமுறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை தெரிந்து கொள்வோம்.

சிறிதளவு வேப்பிலை (கொழுந்து இலைகள் ) மற்றும் கொஞ்சம் துளசி இலை இவை இரண்டையும் கழுவி நிழலில் வைத்து உலர்த்தி நன்கு உலர்ந்த பின் பொடி செய்ய வேண்டும்.தூள் செய்த வேப்பிலை பொடியுடன் சிறிதளவு கடலை மாவு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ள வேண்டும்.

இவை மூன்றும் கலந்த பின் முகத்தில் பூசி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படியே தினமும் 2 வேளை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மாறி முகம் பளபளப்பாகும்.

dark spots,face,beauty,natural,potatoes ,கரும் புள்ளிகள்,முகம்,அழகு,இயற்கை,உருளைக்கிழங்கு

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.

எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.

Tags :
|
|