Advertisement

குளிர் காலத்தில் சூடான நீரில் முகம் கழுவ வேண்டாம்!

By: Monisha Thu, 13 Aug 2020 3:28:17 PM

குளிர் காலத்தில் சூடான நீரில் முகம் கழுவ வேண்டாம்!

குளிர்காலத்தில் வழக்கத்தை விட சரும பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோர்வான முகம், வறண்ட உதடுகள், உலர்ந்த சருமம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தண்ணீர் குறைவாக பருகுவதே அதற்கு முக்கிய காரணம். அது சருமத்தின் உள்புறமும், வெளிப்புறமும் உலர்தன்மை அடைவதற்கு வழிவகுத்துவிடும். ஆல்கஹால் சேர்க்கப்படாத கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.

சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

cold season,skin care,massage,moisturizer,fruits ,குளிர் காலம்,சரும பராமரிப்பு,மசாஜ்,மாய்ஸ்டரைசர்,பழங்கள்

குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது. யோகா செய்து வருவதும் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கும் வழிவகை செய்யும்.

முகத்தை வெந்நீரில் கழுவவும். குளிர் காலத்தில் சூடான நீரில் கழுவினால் ஈரப்பதம் போய்விடும். மாய்ஸ்டரைசரை கழுவிய உடனே தடவவும். கெமிக்கல் அதிகம் இருக்கும் க்ரீம்களை தவிர்க்கவும். இயற்கை பொருட்கள் கொண்டு தயாரான க்ரீம்களை பயன்படுத்தவும். தண்ணீரில் எலுமிச்சை பழத்தை கலந்து அருந்தவும். கை, கால் முட்டிகளை மாய்ஸ்டர் பாம் கொண்டு மிருதுபடுத்தவும்.

Tags :