Advertisement

சருமத்தின் அழகை தக்க வைக்கும் தேனை பயன்படுத்துவது எவ்வாறு?

By: Monisha Fri, 21 Aug 2020 5:20:07 PM

சருமத்தின் அழகை தக்க வைக்கும் தேனை பயன்படுத்துவது எவ்வாறு?

சருமத்தின் அழகு மற்றும் மென்மையைத் தக்க வைக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் தேன். தேனானது நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இத்தகைய தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதுடன், சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும். சரி தேனை எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

தேன் மற்றும் எலுமிச்சை
சருமத்தில் படிந்துள்ள கருமை நிறத்தைதோ அல்லது பழுப்பு நிறத்தையோ போக்குவதற்கு, எலுமிச்சை துண்டை, தேனில் தொட்டு, நிறம் மாறி காணப்படும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

தேன் மற்றும் பால்
சருமத்தின் இளமையைத் தக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் இந்த முறையை பின்பற்றுங்கள். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேனில் 1/2 கப் பால் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு, தினமும் இரண்டு முறை கழுவி வாருங்கள். இதனால் நல்ல பலன் கிட்டும்.

skin,beauty,honey,lemon,milk ,சருமம்,அழகு,தேன்,எலுமிச்சை,பால்

தேன் மற்றும் தக்காளி
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதற்கு, தேனை தக்காளியுடன் சேர்த்து மாஸ்க் போடுவது நல்லது. இந்த முறையைக்கு தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேன் மற்றும் ஆலிவ் ஆயில்
சருமத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால், அதனை மறைய வைக்க வேண்டுமானால், இந்த முறையை முயற்சி செய்யுங்கள். அதற்கு தேனில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 வாரத்திற்கு பின்பற்றினால், நல்ல மாற்றம் தெரிய வரும்.

தேன் மற்றும் தயிர்
சரும வறட்சியினால் அழகு கெடுகிறதா? அப்படியெனில் தேனில் தயிர் சேர்த்து சருமத்தை மசாஜ் செய்யுங்கள். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.

Tags :
|
|
|
|