Advertisement

உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பால் பயன்படுத்துங்க!

By: Monisha Sat, 08 Aug 2020 5:32:46 PM

உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பால் பயன்படுத்துங்க!

உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய் பால் சரும பொலிவிற்கு உதவுகிறது. கருமையை போக்குகிறது. நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தைப் போக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மைகளை தருகிறது. தேங்காய் பாலை தினமும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.

சருமம் நிறம் பெற
கேரட் சாறு – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்

செய்முறை
இரண்டையும் சம அளவு கலந்து முகத்திற்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும்.

skin,face,youth,coconut milk,color ,சருமம்,முகம்,இளமை,தேங்காய் பால்,நிறம்

மாசு மருக்கள் விலக
தேங்காய் பால் – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்

செய்முறை
இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த பேக்போட்டு வர முகம் பிரகாசமாகும். இதில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.

கரும்புள்ளி நீங்க
உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
பயிற்றம் மாவு – 1 டீஸ்பூன்

செய்முறை
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ”பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

Tags :
|
|
|