- வீடு›
- அழகு குறிப்புகள்›
- முகம் பொலிவு பெற வேர்க்கடலை ஃபேஸ்பேக் உபயோகியுங்கள்
முகம் பொலிவு பெற வேர்க்கடலை ஃபேஸ்பேக் உபயோகியுங்கள்
By: Nagaraj Sat, 19 Sept 2020 5:38:59 PM
வேர்க்கடலையானது அதிக அளவு புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இதனை சாப்பிட்டால் தோல் சம்பந்தப்பட்ட அழகினைக் கூட்டுவதோடு, தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் காணாமல் போகச் செய்யும். அந்தவகையில் இப்போது சிவப்பழகினைத் தரும் வகையிலான வேர்க்கடலை ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
வேர்க்கடலை- 10
தயிர்- 3 ஸ்பூன்
தேங்காய்ப் பால்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
செய்முறை: வேர்க்கடலையினை தயிரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
அடுத்து இந்த
வேர்க்கடலையினை மிக்சியில் போட்டு ரொம்பவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேக்குடன் தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தவும்.
இந்த
ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் மசாஜ் செய்து
ஊறவிட்டு கழுவவும். இதனால் முகத்தின் சிவப்பழகு நிச்சயம் கூடும்