Advertisement

ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 296-க்கு விற்பனை

By: Monisha Tue, 28 July 2020 6:32:59 PM

ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 296-க்கு விற்பனை

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தில் உள்ளது.

gold,silver,prices,sales,market share ,தங்கம்,வெள்ளி,விலை,விற்பனை,பங்குச்சந்தை

இந்தநிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.5037-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40 ஆயிரத்து 296-க்கு விற்பனையானது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 42 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 2.00 ரூபாய் உயர்ந்து 72.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :
|
|
|
|