- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம்!
கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம்!
By: Monisha Mon, 08 June 2020 4:04:24 PM
ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் விர்ச்சுவல் அன்பேக்டு விழாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேலக்ஸி அன்பேக்டு விழா ஆன்லைனில் நடைபெறுகிறது. ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் தங்களின் அறிமுக நிகழ்வுகளை ஆன்லைனில் நடத்த துவங்கி விட்டன. கடந்த ஆண்டு சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களை ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்தது.
அந்த வகையில் இந்த ஆண்டும் சாம்சங் அதே தேதியில் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிகழ்வில் நோட் மாடல் தவிர கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
இதுதவிர கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி, கேலக்ஸி டேப் எஸ்7 / எஸ்7 பிளஸ் மற்றும் கேலக்ஸி வாட்ச் 2 போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.