- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்வு
By: Monisha Mon, 31 Aug 2020 2:04:05 PM
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை 30 ஆயிரத்தில் இருந்து சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் நிலவி வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 954 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒருகிராம் வெள்ளியின் விலை 3 ரூபாய் 70 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.