Advertisement

பெட்ரோல், டீசல் விலை 21 நாட்களாக தொடர்ந்து உயர்வு

By: Monisha Sat, 27 June 2020 12:01:59 PM

பெட்ரோல், டீசல் விலை 21 நாட்களாக தொடர்ந்து உயர்வு

சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 16-ம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

petrol,diesel,price,crude oil,chennai ,பெட்ரோல்,டீசல்,விலை,கச்சா எண்ணெய்,சென்னை

இந்நிலையில் 21 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதன்காரணமாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|