Advertisement

பண்டிகை கால விற்பனையில் பல ஆயிரம் கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டதா ?

By: Karunakaran Sat, 24 Oct 2020 5:11:05 PM

பண்டிகை கால விற்பனையில் பல ஆயிரம் கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டதா ?

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல சலுகைகளுடன் சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றனர்.

பண்டிகை கால விற்பனையில் இந்த நிறுவனங்கள் சுமார் ரூ. 47 ஆயிரம் கோடி வருவாயை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஈட்டும் என நுகர்வோர் செலவீனம் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் கணித்து இருக்கிறது. இந்நிலையில், முன்னணி ஆன்லைன் விற்பனையாளர்கள் நடத்திய பண்டிகை கால விற்பனையில் பல ஆயிரம் கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

trade,festive season sales,flipkart,amazon ,வர்த்தகம், பண்டிகை கால விற்பனை, பிளிப்கார்ட், அமேசான்

இந்த தொகையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் அதாவது ரூ. 35,400 கோடிகள் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 21 வரையிலான காலக்கட்டத்தில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையிலேயே நுகர்வோர் செலவு செய்து இருக்கலாம் என தெரிவித்து இருக்கிறது.

சமீபத்திய ஆன்லைன் விற்பனைகளில் சுமார் 5.5 முதல் 6 கோடி பயனர்கள் கலந்து கொண்டிருப்பர் என்றும், இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை அதிகபட்சம் 34 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விரும்பப்படும் சாதனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
|