Advertisement

இந்த வார எவிக்சனில் இருந்து தப்பிய 5 பேர்!

By: Monisha Sat, 31 Oct 2020 6:27:31 PM

இந்த வார எவிக்சனில் இருந்து தப்பிய 5 பேர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர் நாமினேசன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 5 பேருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ, ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர்கள் எவிக்சனில் இருந்து தப்பித்து விட்டதாகவும், இதனை இன்று கமல்ஹாசன் முறைப்படி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

big boss show,eviction,balaji murugadoss,ramya pandian,rio ,பிக்பாஸ் நிகழ்ச்சி,எவிக்சன்,பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ

அப்படியானால் மீதி உள்ள சனம், ஆஜித், அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், வேல்முருகன் ஆகிய 6 பேர்களில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. அர்ச்சனா வந்ததில் இருந்தே சுரேஷ் அடக்கி வாசிக்கின்றார். அவரது பழைய தந்திரம், நையாண்டி அவரிடம் மிஸ்ஸிங் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

அதேபோல் சனம், அனிதா ஆகியோர் தங்களுடைய வாயாலே தங்கள் பெயரை கெடுத்து கொள்வதால் வாக்குகளில் பின் தங்கியிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இந்த வாரம் ஆஜித் அல்லது வேல்முருகன் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Tags :