Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நாளைக்கு எனக்கும் உனக்கும் அப்படித்தான் நடக்கும்; குரூப்பிஸத்தை ஒப்புக்கொண்ட ஆரி

நாளைக்கு எனக்கும் உனக்கும் அப்படித்தான் நடக்கும்; குரூப்பிஸத்தை ஒப்புக்கொண்ட ஆரி

By: Monisha Mon, 07 Dec 2020 3:06:40 PM

நாளைக்கு எனக்கும் உனக்கும் அப்படித்தான் நடக்கும்; குரூப்பிஸத்தை ஒப்புக்கொண்ட ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனம்ஷெட்டி வெளியேறியது அர்ச்சனா குரூப்புக்கு இன்னொரு வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது. அந்த குரூப்பில் உள்ள ஏழு பேர்களும் அப்படியே தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தனித்தன்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று ஆரி, அனிதா, பாலாஜி ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். அர்ச்சனா குருப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தரையும் காப்பாற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றார்கள் என்றும், தனித்தன்மையுடன் விளையாடுபவர்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள் என்றும் ஆரி கூறுகின்றார்.

aari,anita,balaji,big boss,archana ,ஆரி,அனிதா,பாலாஜி,பிக்பாஸ்,அர்ச்சனா

அப்போது அனிதா, இது என்ன கேம் என்று எனக்கு புரியவில்லை, ஏன் இந்த கேமை விளையாட வேண்டும்? என்று அவர் சலிப்புடன் கூறுகிறார். ஒவ்வொரு வாரமும் ஒரே குரூப்பில் உள்ள 7 பேர்கள், தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வெளியேற்றி கொண்டே இருந்தால் அந்த குரூப் வலிமையாக உள்ளே இருப்பார்கள், இன்று சனம் வெளியேறியதை நாம் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் நாளைக்கு எனக்கும் உனக்கும் அப்படித்தான் நடக்கும் என்று ஆரி கூறுகிறார்

அப்போது பாலாஜி 'நான் இதையேதான் இரண்டு வாரங்களுக்கு முன் கூறினேன். பிக்பாஸ் வீட்டில் இன்பேலன்ஸ் வரப்போகிறது என்று நான் ஏற்கனவே கூறினேன்' என்று கூறுகிறார் அதை ஆரியும் தற்போது தாமதமாக ஒப்புக்கொள்வதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

Tags :
|
|
|