Advertisement

மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

By: Nagaraj Sun, 09 Aug 2020 3:47:46 PM

மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்திற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சு திணறலுடன் அவருக்கு காய்ச்சலும் இருந்ததால் உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தது. இதனால் அவருக்கு கொரோனா இல்லை என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

இருப்பினும் அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிசிக்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

actor sanjay dutt,hospital,corona no,surveillance ,
நடிகர் சஞ்சய்தத், மருத்துவமனை, கொரோனா இல்லை, கண்காணிப்பு

இதுகுறித்து நடிகர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளதாவது:

"நான் நன்றாக இருக்கிறேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். நான் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறேன். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. லீலாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் உதவி மற்றும் கவனிப்புடன், நான் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவேன்.
உங்கள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி. இவ்வாறு தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.

Tags :