Advertisement

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் நடிகர் சிம்பு தரப்பினர்

By: Nagaraj Sun, 13 Sept 2020 11:37:20 AM

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் நடிகர் சிம்பு தரப்பினர்

மாநாடு படம் மட்டும்தான் நடிக்கிறார் சிம்பு. வேறு எந்த படமும் கமிட் பண்ணவில்லை என்று சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் அவர் ஹன்சிகாவுடன் அடுத்த மஹா என்ற திரைப்படமும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இந்நிலையில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படும் படங்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட ஒரு டஜனுக்கும் மேல் வந்துவிட்டது. கேஎஸ் ரவிக்குமார் முதல் மனோஜ் பாரதிராஜா என பல இயக்குனர்களின் படங்களில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

conference,chip,story not heard,fantasy,deal ,மாநாடு, சிம்பு, கதை கேட்கவில்லை, கற்பனை, ஒப்பந்தம்

குறிப்பாக 'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அதில் கமல் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் வதந்திகள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது சிம்பு தரப்பினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

மாநாடு படத்தில் மட்டுமே சிம்பு நடித்து வருவதாகவும் வேறு எந்த படத்திலும் அவர் இதுவரை நடிக்க ஒப்பந்தமாகவில்லை. கதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். எனவே சிம்புவின் படங்கள் குறித்து கற்பனையாக கதைகள் எதையும் பரப்ப வேண்டாம் என்றும் அவரது அடுத்த படம் கமிட் ஆனதும், சிம்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தற்போது சிம்பு 'மாநாடு' படத்தில் மட்டும் முழு கவனத்தை செலுத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|