Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்

முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்

By: Monisha Thu, 29 Oct 2020 10:33:11 AM

முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்

நடிகர் சூரி, சமீபத்தில் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது நில மோசடி புகார் கொடுத்தார் என்பதும், இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி தரப்பில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் சூரி தனது மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pre bail,actor soori,vishnu vishal,ramesh kudawala,land scam ,முன் ஜாமீன்,நடிகர் சூரி,விஷ்ணு விஷால்,ரமேஷ் குடவாலா,நில மோசடி

முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் தந்தை தயாரித்த 'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு 40 லட்சம் சம்பளத்துக்கு பதிலாக சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாகவும் அதற்காக கூடுதலாக சூரி 2 கோடியே 70 லட்சம் வாங்கி கொண்டதாகவும், ஆனால் நிலத்தை வாங்கித் தராமல் விஷ்ணுவிஷாலின் தந்தை இழுத்தடித்ததாக போலீசில் சூரி புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :