Advertisement

மீண்டும் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சூடுபிடிக்கும் என்று தகவல்

By: Nagaraj Wed, 30 Dec 2020 7:26:33 PM

மீண்டும் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சூடுபிடிக்கும் என்று தகவல்

மீண்டும் சித்ரா வழக்கு சூடுபிடிக்கும் என்று தகவல்... சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், ஆர்.டி.ஓ. திவ்யஷி தனது விசாரணையை முடித்து காவல்துறை வசம் ஒப்படைத்து உள்ளதாகவும், இதனால், இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னத்திரை நடிகர் சித்ரா கடந்த 9 -ம் தேதி சென்னை அருகே உள்ள நசரத்பேட்டையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே சம்பவம் நடந்த அன்று படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வந்த சித்ரா, செல்போனில் நீண்டநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தாய் மற்றும் ஹேம்நாத்திடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத், பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சித்ரா கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட சீரியல் படப்பிடிப்பின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹோட்டல் ஊழியர்கள் ஆகியோரிடமும் போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

suicide case,actress chitra,police,investigation ,தற்கொலை வழக்கு, நடிகை சித்ரா, காவல்துறையினர், விசாரணை

இந்நிலையில், சித்ரா அண்மையில் ஹேம்நாத்துடன் திருமணம் கொண்டதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிட்டப்பட்டது. அதன்பேரில், சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. நடத்தப்பட்டதாகவும், அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, நடிகை சித்ரா தற்கொலை வழக்கு விசாரணை அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஷி முழுமையாக முடித்துள்ளதாகவும், அதனை அவர் காவல்துறையினர் வசம் ஒப்படைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஆர்டிஓ அளித்துள்ள அறிக்கையை மையமாக வைத்து காவல்துறையினரின் விசாரணை மேலும் தீவிரமாகும் என கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

Tags :
|