Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திரைப்பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ரவிச்சந்திரனுடன் மீண்டும் நடிப்பேன்; நடிகை குஷ்பு

திரைப்பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ரவிச்சந்திரனுடன் மீண்டும் நடிப்பேன்; நடிகை குஷ்பு

By: Monisha Sun, 01 Nov 2020 3:33:33 PM

திரைப்பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ரவிச்சந்திரனுடன் மீண்டும் நடிப்பேன்; நடிகை குஷ்பு

கன்னட நடிகர் ரவிச்சந்திரன் குறித்த நினைவுகளை நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் 'தர்மத்தின் தலைவன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அதற்கு முன்னரே அதே ஆண்டில் குஷ்பு 'ரனதீரா' என்ற கன்னட படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ரனதீரா' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகியதால் அதன் பின்னர் ரவிச்சந்திரனின் ஒரு சில படங்களில் குஷ்பு நாயகியாக நடித்து இருந்தார் என்பதும், தமிழில் கூட ரஜினிகாந்த் நடித்த 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' என்ற திரைப்படத்திலும் ரவிச்சந்திரன்-குஷ்பூ ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

actress khushboo,ravichandran,kannada,cinema,hit ,நடிகை குஷ்பு,ரவிச்சந்திரன்,கன்னடம்,சினிமா,ஹிட்

இந்த நிலையில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் குறித்த நினைவுகளை சமீபத்தில் குஷ்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். ரவிச்சந்திரனுடன் நான் நடித்த முதல் கன்னடப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக ஆனதால் நான் கன்னட சினிமாவின் ஒரு பகுதியாக இருந்தேன்.

நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் இன்னும் நான் தொடர்பில் இருக்கிறேன். எங்களை ரசிகர்கள் சிறப்பான ஜோடியாக மனதில் வைத்து இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை நான் ஏமாற்ற மாட்டேன். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ரவிச்சந்திரனுடன் மீண்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Tags :
|