- வீடு›
- பொழுதுபோக்கு›
- அசிஸ்டெண்ட் செய்த துரோகம் பற்றி வேதனையுடன் தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
அசிஸ்டெண்ட் செய்த துரோகம் பற்றி வேதனையுடன் தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
By: Nagaraj Fri, 18 Sept 2020 8:52:44 PM
காசுக்காக தன் அசிஸ்டெண்ட் செய்த துரோகம் பற்றி வேதனை தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த படம் ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.
அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட
சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம்,
வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து
வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளதாவது:
என்னுடைய அசிஸ்டன்ட் ஒருவர் தன்னை ஏமாற்றி துரோகம் செய்து விட்டார்.
காசுக்காக எனக்கு தெரியாமலே என்னுடைய ரகசியம் மற்றும் புது படங்களின்
அப்டேட்டுகளை வெளியிட்டு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி என்னுடைய
வீட்டின் லாக்கர் நம்பரை கூட அந்த நபர் கொடுத்துள்ளார். இதையெல்லாம்
பார்த்தால் யாரை நம்புவதென்றே தெரியவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.