- வீடு›
- பொழுதுபோக்கு›
- மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கிய ஆல்யா மானசா
மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கிய ஆல்யா மானசா
By: Nagaraj Fri, 04 Sept 2020 8:40:34 PM
மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார் ஆல்யா மானசா. இதுகுறித்து அவரே தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அப்படியே சீரியல் பக்கம் வந்தவர் ஆல்யா மானசா. ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பின் அந்த சீரியலின் நாயகனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இருவருக்கும் அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜலா
என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர். சஞ்சீவ் சீரியல்கள் நடிக்க
ஆரம்பித்துவிட்டார் ஆல்யா மானசா மட்டும் எந்த வேலையும் தொடங்காமல்
இருந்தார். இப்போது ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ள அவர் சீரியலில்
நடிக்க தொடங்கிவிட்டார்.
அந்த சீரியலுக்கான புரொமோ அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது, இந்த தகவலை ஆல்யா மானசாவே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.