Advertisement

குழாயடிச் சண்டை... கலகலப்பாக மாறிய பிக்பாஸ் வீடு!

By: Monisha Tue, 17 Nov 2020 4:32:56 PM

குழாயடிச் சண்டை... கலகலப்பாக மாறிய பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 45 நாட்கள் ஆகிவிட்டதை அடுத்து 45 மணி நேரம் டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கால் இன்றும் நாளையும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் அர்ச்சனா மற்றும் நிஷா ஆகிய இருவரும் தண்ணீர் பிடிக்க குழாயடிச் சண்டை போட்ட காட்சிகள் உள்ளன. என்னடா 10 குடம் தண்ணி கொடுக்குறீங்க அறிவு இருக்காடா உங்களுக்கெல்லாம் என சோம் சேகரை பார்த்து நிஷா கேட்டபோது, என்ன நடந்தது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் சோம்.

archana,nisha,big boss,rivals,fight ,அர்ச்சனா,நிஷா,பிக்பாஸ்,போட்டியாளர்கள்,சண்டை

மேலும் அர்ச்சனாவை பார்த்து 'இந்தா வந்துட்டா பாரு சிலுப்பி, இங்க குடத்துல தண்ணி பிடிக்க வந்தியா, குடத்தை திருட வந்தியா' என அச்சு அசல் குழாயடிச் சண்டை போடுவது போன்றே நிஷா பேச, அதற்கு அர்ச்சனாவும் நிஷாக்கு நிகராக சண்டை போட்டுக் கொண்டிருக்க பிக்பாஸ் வீடே ஒரே கலகலப்பாக மாறியது.

ஒரு கட்டத்தில் இருவரும் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டை போட சக போட்டியாளர்கள் இது விளையாட்டு சண்டையா? அல்லது உண்மையான சண்டையா? என்று சந்தேகத்தோடு இந்த சண்டையை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சண்டையில் குறுக்கிட்ட ஜித்தன் ரமேஷ் 'சண்டை போட்டு கொண்டா இடுப்புல கை வைக்க கூடாது' என்று கமென்ட் அடித்தார்.

Tags :
|
|