Advertisement

பிக்பாஸ் கொடுத்த டஸ்க்கால் சோகமயமாக மாறிய பிக்பாஸ் வீடு!

By: Monisha Mon, 09 Nov 2020 2:43:14 PM

பிக்பாஸ் கொடுத்த டஸ்க்கால் சோகமயமாக மாறிய பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில் 9 பேர் நாமினேசன் செய்யப்பட்டார்கள். இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது புரமோவில் ஒரே ஒரு கடிதம் காரணமாக பிக்பாஸ் வீடியோ சோகமயமாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்களில் முதல் முதலாக இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

big boss,diwali festival,tragedy,letter ,பிக்பாஸ்,தீபாவளி பண்டிகை,சோகம்,கடிதம்

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் குடும்பத்தோடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடப் போகும் பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த தீபாவளி பண்டிகையை சேர்ந்து கொண்டாட விரும்பும் ஒரு நபருக்கு கடிதம் எழுத உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என பிக்பாஸ் கூறுகிறார்.

இதனையடுத்து போட்டியாளர்கள் குறிப்பாக அர்ச்சனா, சுசித்ரா, ரமேஷ், பாலாஜி, அனிதா, நிஷா, உள்ளிட்ட போட்டியாளர்கள் தாங்கள் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்பும் ஒரு நபர் குறித்து கடிதம் எழுதுகின்றனர். இந்த கடிதத்தை எழுதும்போது அவர்கள் கண்கலங்கி சோகமாக இருப்பதால் பிக்பாஸ் வீடே சோகமாக மாறி உள்ளது.

Tags :