Advertisement

நாமினேஷன் படலத்தில் சிக்கிய 7 பேர்

By: Monisha Tue, 03 Nov 2020 5:41:44 PM

நாமினேஷன் படலத்தில் சிக்கிய 7 பேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்தில் ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டனர். ஆரியை அர்ச்சனா, ஆஜித், சோம்சேகர், ரியோ, ஷிவானி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி ஆகிய 8 பேர் நாமினேட் செய்தனர். இவர்களில் 5 பேர் அர்ச்சனா குரூப்பில் உள்ளவர்கள்.

அர்ச்சனாவை ஆரி, அனிதா, கேப்ரில்லா, சுசித்ரா, ஆகிய 4 பேர்கள் நாமினேட் செய்துள்ளனர். பாலாஜியை ரம்யா, சனம்ஷெட்டி, சோம்சேகர், நிஷா ஆகிய 4 பேர் நாமினேட் செய்தனர். சனம்ஷெட்டியை ரம்யா, ஆஜித், ஷிவானி, பாலாஜி, ஆகிய 4 பேர்கள் நாமினேட் செய்தனர். அனிதாவை சுரேஷ், அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரியோ 4 பேர்கள் நாமினேட் செய்தனர்.

bigg boss show,nomination,archana,anita,balaji ,பிக்பாஸ் நிகழ்ச்சி,நாமினேஷன்,அர்ச்சனா,அனிதா,பாலாஜி


சோம்சேகரை நாமினேட் செய்தவர்கள் கேப்ரில்லா, சுரேஷ், ஆரி ஆகிய 3 பேர்கள் என்பதும், சுரேஷை நாமினேட் செய்தவர்கள் நிஷா, சுசித்ரா, ஆகிய இரண்டு பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இறுதியாக அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய ஏழு பேர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

கேப்ரில்லாவை அனிதாவும், ஷிவானியை சனம்ஷெட்டியும் ரியோவை சம்யுக்தாவும் நாமினேட் செய்திருந்தாலும் ஒரே ஒருவர் மட்டுமே நாமினேட் செய்ததால் மூவரும் நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளனர்.

Tags :
|