Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய பட்டிமன்றம் பரபரப்பை ஏற்படுத்துமா?

By: Monisha Thu, 22 Oct 2020 4:19:58 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய பட்டிமன்றம் பரபரப்பை ஏற்படுத்துமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகள் கொண்ட மூன்று புரமோக்கள் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருப்பதோடு, நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையிலும் உள்ளது.

அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் ரம்யா மற்றும் ரியோ சண்டை போடுவது குறித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பட்டிமன்றம் நடக்கின்றது. பட்டிமன்றத்தின் தலைப்பு 'பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம்' மற்றும் 'பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம்'

'பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம்' என்ற தலைப்பில் வேல்முருகன் உள்பட ஒருசிலர் பேசுகின்றனர். அதேபோல் 'பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம்' என அனிதா, ரியோ பேசுகின்றனர். அனிதா உண்மையிலேயே பட்டிமன்ற பேச்சாளர் என்பதால் அவருடைய பேச்சில் அனல் பறக்க வாய்ப்பு உள்ளது.

big boss show,bar,anita,rio,aranthangi nisha ,பிக்பாஸ் நிகழ்ச்சி,பட்டிமன்றம்,அனிதா,ரியோ,அறந்தாங்கி நிஷா

இந்த நிலையில் இந்த பட்டிமன்றத்தில் அறந்தாங்கி நிஷா பேசியபோது, 'புரணி பேசறது அழகுங்க, ஒருவரது உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும்போது தான் அந்த புரணி அசிங்கம். அந்த புரணியை வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க' என்று ஆவேசமாக பேசினார். அவருடைய பேச்சை மற்ற போட்டியாளர்கள் குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி அமைதியுடன் கேட்டு வருகிறார்.

இந்த பட்டிமன்றம் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Tags :
|
|
|