Advertisement

எட்டி உதைத்த சனம்ஷெட்டி... பொங்கி எழுந்த பாலாஜி!

By: Monisha Mon, 02 Nov 2020 5:50:57 PM

எட்டி உதைத்த சனம்ஷெட்டி... பொங்கி எழுந்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜியின் பின்புறத்தில் சனம்ஷெட்டி, எட்டி உதைத்ததால் பொங்கி எழுந்த பாலாஜி ஆத்திரத்துடன் பேசி வருகிறார். பாலாஜி மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த போது அதை அமைதியாக அர்சனா குருப்ப் மட்டுமின்றி புதிதாக வந்த போட்டியாளர் சுசித்ராவும் வேடிக்கை பார்க்கும் காட்சிகள் உள்ளன.

சனம்ஷெட்டி டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது திடீரென பாலாஜியின் பின்னால் எட்டி உதைக்கிறார். இதனை ஞாபகம் வைத்து மறுநாள் ஆவேசமான பாலாஜி, சனம்ஷெட்டியுடன் சண்டைக்கு செல்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டு வருகின்றனர். அறிவில்லையா? வேண்டுமானால் திரும்பி என்னை எட்டி உதச்சுக்கோ' என சனம் ஆவேசமாக கூறுகிறார்.

bigg boss show,sanamshetty,balaji,anger,fight ,பிக்பாஸ் நிகழ்ச்சி,சனம்ஷெட்டி,பாலாஜி,கோபம்,சண்டை

இந்த சண்டையை விலக்கும் வகையில் சுரேஷ், ஆஜித், ஆரி, சம்யுக்தா உள்பட ஒரு சிலர் இருவரையும் அமைதிப்படுத்த முயற்சிக்கின்றனர். பாலாஜி, சனம் ஆகிய இருவரும் தங்களுடைய குரூப் இல்லை என்பதால் அர்ச்சனா குருப்பில் உள்ளவர்களும் இந்த சண்டையை வேடிக்கை பார்க்கின்றனர். அதேபோல் புதிய போட்டியாளரான சுசித்ராவும் இந்த சண்டையை வேடிக்கை பார்த்தபடியே சாப்பிட்டு வருகிறார். இந்த சண்டையை வைத்து இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பாதி நேரம் முடிந்துவிடும் என தெரிகிறது.

Tags :
|
|