Advertisement

இன்று வெளியேற போவது ஒருவரா? அல்லது இருவரா?

By: Monisha Sun, 20 Dec 2020 1:11:51 PM

இன்று வெளியேற போவது ஒருவரா? அல்லது இருவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அந்த வீட்டில் உள்ள ஒருவர் வெளியேற உள்ளார். நேற்று ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று ஆஜித், அனிதா, அர்ச்சனா, ஷிவானி மற்றும் சோம் ஆகிய ஐந்து பேர்களில் ஷிவானி சேவ் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆஜித், அர்ச்சனா, அனிதா, மற்றும் சோம் ஆகிய நான்கு பேர்களில் ஒருவர் இன்று வெளியேறுகிறார். யார் வெளியேறுகிறார் என்பதை கமல்ஹாசன் அறிவிக்கும் முன் இந்த நான்கு பேரில் யார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கமலஹாசன் கேட்ட போது சோம் என்று பாலாஜியும், ஆஜித் என்றும் ஆரியும் கூறுகின்றனர்.

big boss,ajith,archana,anita,som ,பிக்பாஸ்,ஆஜித், அர்ச்சனா, அனிதா, சோம்

இதனையடுத்து ஆஜித் டென்ஷனாக இருப்பதை பார்த்த கமல், ஆஜித் சீட் நுனியில் உட்கார்ந்திருக்கிறார் என்று கூறிவிட்டு 'மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்' என்று கூறி நாமினேஷன் அட்டையே எடுக்கிறார்.

மேலும் இதில் ஒருவர் இருக்கிறாரா அல்லது இருவர் இருக்கின்றாரா பார்ப்போம் என்று அவர் கூறும்போது நாமினேஷன் செய்யப்பட்ட நான்கு பேரின் இதயத் துடிப்பும் அதிகரித்திருக்கும்.

Tags :
|
|