Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதை 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவு

சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதை 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவு

By: Nagaraj Thu, 24 Sept 2020 4:30:12 PM

சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதை 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவு

30ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவு... 'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 வரை நிறுத்தி வைக்க நடிகர் விஷால் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விசாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

vishal picture,odt,30th,court,order ,விஷால் படம், ஓடிடி, 30ம் தேதி, நீதிமன்றம், உத்தரவு

ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, ஆக்சன் பட நஷ்டத்திற்காக விஷால் தரவேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் மனுதாரர் கோரியிருந்தார்.

இரு தரப்பினரும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி என்.சதீஷ்குமார், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags :
|
|
|