Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • புயல், வெள்ளம் காரணம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

புயல், வெள்ளம் காரணம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

By: Nagaraj Sat, 28 Nov 2020 8:50:35 PM

புயல், வெள்ளம் காரணம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

நேற்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். காரணம் மழை, வெள்ளம் என்று கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிவடைந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 55 ஆவது நாளை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை சென்னை மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே நிவர் புயல் கரையை கடந்தது.

இதனால் சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பிக்பாஸ் வீடு அமைந்துள்ள இடம் செம்பரம்பாக்கம் ஏரி அருகே இருப்பதால் பிக்பாஸ் வீட்டிற்குள் தண்ணீர் சூழ்ந்ததாக கூறப்பட்டது.

big boss,tv,rivals,storm,announcement ,பிக்பாஸ், தொலைக்காட்சி, போட்டியாளர்கள், புயல், அறிவிப்பு

இதனால் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
அதனை உறுதி செய்யும் விதமாக நேற்றைய எபிசோடில் புயல் காரணமாக போட்டியாளர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் பிக்பாஸ் போட்டியின் விதிமுறைகளை அப்படியே பின்பற்றி பாதுகாப்பான இடத்தில் தனிமைப்படுத்தப்பட முடிவு செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து மெயின் டோர் வழியாக வெளியேறினர். பின்னர் மறுநாள் காலை புயல் கரையை கடந்த பின்னர் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
புயல் கரையை கடந்தது கடந்த புதன்கிழமை நள்ளிரவு. அன்றைய காட்சிகள் நேற்று தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|