Advertisement

பிக்பாஸ் வீட்டில் வெள்ளம்... போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றமா?

By: Monisha Thu, 26 Nov 2020 4:34:50 PM

பிக்பாஸ் வீட்டில் வெள்ளம்... போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு அனைத்து போட்டியாளர்களும் திடீரென வெளியேற்றபட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வினாடிக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது

big boss,flood,rivals,nivar storm,heavy rain ,பிக்பாஸ்,வெள்ளம்,போட்டியாளர்கள்,நிவர் புயல்,கனமழை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதும் இந்த ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் இதனால் போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எங்களுக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியே வேண்டாம், நாங்கள் வீட்டுக்கு செல்கிறோம் என்று பல போட்டியாளர்கள் கூறியதை அடுத்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|
|