Advertisement

நீரில் மூழ்கி மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு பரிதாப பலி

By: Nagaraj Sat, 26 Dec 2020 09:44:33 AM

நீரில் மூழ்கி மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு பரிதாப பலி

அணையில் குளித்த போது நடிகர் நீரில் மூழ்கி பலி...பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நடிகர் ஒருவர் அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரித்விராஜ், பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் நெடுமங்காடு (48) நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டார்.

police,case,dam water,actor killed ,போலீசார், வழக்குப்பதிவு, அணை நீர், நடிகர் பலி

மாலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அனில் தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர்.

ஆழம் அதிகம் என்பதால் அவரை மீட்பதில் முதலில் சிரமம் ஏற்பட்டபோதும் அவரை மீட்ட நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
|
|