Advertisement

பிக்பாஸ் இல்லத்தில் முதல் வார கேப்டனாக ரம்யா பாண்டியன் தேர்வு

By: Nagaraj Tue, 06 Oct 2020 08:58:21 AM

பிக்பாஸ் இல்லத்தில் முதல் வார கேப்டனாக ரம்யா பாண்டியன் தேர்வு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் வார கேப்டனாக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. 100 நாட்கள் ஒரே வீட்டில் 16 போட்டியாளர்களில் கடைசியாக இருக்கும் நபர்களில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

இந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை என்று நேற்றைய அறிமுக நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். நான்காவது சீசனாக இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த வார கேப்டனுக்கான தேர்வு இன்று நடைபெற்றது.

this week,chairman,hart brad,ramya pandian ,இந்த வாரம், தலைவர், ஹார்ட் பிரேட், ரம்யா பாண்டியன்

அதில் மேலே இருந்து பந்துகள் போட்டியாளர்கள் மீது விழுந்தது. அதை ரம்யா பாண்டியன் தவிர்த்து அனைவரும் பிடித்தனர். பந்தை பிடிக்காத ரம்யா பாண்டியன் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சமையல் குழு, சுத்தம் செய்யும் குழுவை பிரித்து கொடுத்தார். பின்னர் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் (ஹார்ட்), பிடிக்காதவர்களுக்கு (ஹார்ட் பிரேக்) முத்திரையிட்டனர்.

இதில் அதிகம் ஹார்ட் பிரேக் வாங்கியவர் என்றால் அது ஷிவானிதான். காரணம் அவர் யாரிடமும் அதிகம் பழகாமல் ஒதுங்கியே இருப்பதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags :