Advertisement

குழந்தைகளுக்கான படத்தை இயக்கிய சந்தோஷ்குமார்!

By: Monisha Fri, 27 Nov 2020 3:42:29 PM

குழந்தைகளுக்கான படத்தை இயக்கிய சந்தோஷ்குமார்!

குழந்தைகளை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும் குழந்தைகளுக்கான படம் ஒன்றை டைரக்டர் சந்தோஷ்குமார் இயக்கியுள்ளார்.

"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி..." என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளின் கருத்தை அடிப்படையாக வைத்து, 'தகவி' படத்தை உருவாக்கி வருகிறோம் என்று டைரக்டர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அவர்களை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும் குழந்தைகளுக்கான படம், இது. என்று தெரிவித்தார்.

children,santoshkumar,shooting,art,s. naveenkumar ,குழந்தைகள்,சந்தோஷ்குமார்,படப்பிடிப்பு,கலை,எஸ்.நவீன்குமார்

எஸ்.நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தில், 'நான் கடவுள்' ராஜேந்திரனுடன் ராகவ், ஜெய் போஸ் ஆகிய இருவரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். பயில்வான் ரங்கநாதன், அஜய் ரத்னம், வையாபுரி, சாப்ளின் பாலு மற்றும் பல குழந்தைகள் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைக்கிறார்.

சேலம், ஏற்காடு, விநாயகம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தை ஜனவரி மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Tags :
|