Advertisement

அமைதியாக இருந்து ஆணித்தரமான கருத்தை கூறிய ஷிவானி!

By: Monisha Mon, 14 Dec 2020 5:30:08 PM

அமைதியாக இருந்து ஆணித்தரமான கருத்தை கூறிய ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் இந்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு வர தகுதி இல்லாதவர்கள் என்று யார் யாரை நினைக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்தை கூறினார்கள். அப்போது அனைவரையும் அசத்தும் ஷிவானி கூறிய கருத்து இருந்தது

அவர் இது குறித்து கூறிய போது, "இங்கே எல்லோரிடமும் ஃபேவரிட்ஸம் இருக்கின்றது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இங்கே ஃபேவரிட்ஸம் பண்றங்கவங்களை விட ஃபேவரிட்ஸத்தை ஏற்று கொள்பவர்களை தான் நான் குற்றவாளியாக பார்க்கிறேன். அந்தப் ஃபேவரிட்ஸத்தை ஏற்றுக்கொண்டபோது அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள் என்று நான் பார்க்கிறேன். அப்படி நான் பார்க்கும் இருவர் நிஷா மற்றும் கேபி என்று கூறுகிறார்.

shivani,big boss show,kamal haasan,favorite,group ,ஷிவானி,பிக்பாஸ் நிகழ்ச்சி,கமல்ஹாசன்,ஃபேவரிட்ஸம்,குரூப்

அதாவது தங்களுடைய ஆதாயத்திற்காக குரூப்பை ஏற்படுத்துபவர்களை விட அந்த குரூப்பில் போய் இணைந்து கொண்டவர்கள் தான் தங்களுடைய தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள் என்ற ஆணித்தரமான ஒரு கருத்தை மிக எளிமையாக ஷிவானி கூறியுள்ளார் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஷிவானி பல இடங்களில் அமைதியாக இருந்தாலும் சொல்ல வேண்டிய இடத்தில் தனது கருத்தை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார். குறிப்பாக, பார்வையாளர் ஒருவர் கால் செய்தபோதும் ஷிவானி அதற்கு சரியான பதிலை கூறி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :