- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- சவுண்ட்பாரை அறிமுகம் செய்த டிசிஎல் நிறுவனம்!
சவுண்ட்பாரை அறிமுகம் செய்த டிசிஎல் நிறுவனம்!
By: Monisha Wed, 28 Oct 2020 5:24:45 PM
டிசிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் டிஎஸ்3015 சவுண்ட்பாரை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் டிசிஎல் நிறுவனத்தின் முதல் ஆடியோ சாதனம் இது ஆகும். முன்னதாக டிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட் டிவி மற்றும் ஏசி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டிசிஎல் QLED மற்றும் LED ரக டிவிக்களை சி715 சீரிசில் அறிமுகம் செய்தது.
இது டிசிஎல் நிறுவனத்தின் 2.1 சேனல் சவுண்ட்பார் ஆகும். புதிய டிசிஎல் சவுண்ட்பார் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கிறது.
புதிய டிசிஎல் சவுண்ட்பார் பிளாபன்ட், சியோமி மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் சவுண்ட்பார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மெயின் பார் ஸ்பீக்கர் இரண்டு ஆடியோ சேனல்களை கொண்டிருக்கிறது. இதன் சப்-ஊபரில் லோ-எண்ட் பிரீக்ன்சிக்களை இயக்குகிறது.