Advertisement

ஆரம்பிச்சுடுச்சு முதல் சண்டை... இது பிக்பாஸ்-4 வீட்டில் தான்!

By: Nagaraj Wed, 07 Oct 2020 4:00:44 PM

ஆரம்பிச்சுடுச்சு முதல் சண்டை... இது பிக்பாஸ்-4 வீட்டில் தான்!

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று பிக்பாஸ் வீட்டில் சண்டை பத்திக்கிச்சு... பத்திக்கிச்சு.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 3 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதில், நடிகை ஷனம் ஷெட்டி, நடிகை ஷிவானி நாராயணன், அறந்தாங்கி நிஷா, சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ராஜ், நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, நடிகை ரேகா, நடிகை கேப்ரில்லா, நடிகர் சுரேஷ், நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை சம்யுக்தா கார்த்திக், மாடலிங் துறையை சேர்ந்த பாலா மற்றும் சோம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்ற பட்டியல் தொடர்பான என்ற ப்ரமோ வீடியோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. நேற்று அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த கதைகளை கூறினர். இதில், 4 பேரை அடுத்த வார எவிக்‌ஷனில் கலந்து கொள்பவர்கள் என பாலா அறிவித்தார்.

fight,big boss-4,drp,actor suresh,anita ,சண்டை, பிக்பாஸ்-4, டிஆர்பி, நடிகர் சுரேஷ், அனிதா

அதன்படி, சோம், ரேகா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா ஆகிய 4 பேரையும் அறிவித்துள்ளார். இது தொடர்பான ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் சுரேஷுக்கும், அனிதாவுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. அதில் நடிகர் சுரேஷ் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்லி மரியாதைதான் முக்கியம் என்கிறார். வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகளை வைத்துத்தான் டி.ஆர்.பியை ஏற்றுவார்கள். தற்போது அது துவங்கியுள்ளது. பார்ப்போம் என்னதான் நடக்கும் என்று.

Tags :
|
|