Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூன்றே மூன்று தீர்வுகள்; கவியரசு வைரமுத்து

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூன்றே மூன்று தீர்வுகள்; கவியரசு வைரமுத்து

By: Monisha Tue, 25 Aug 2020 12:40:51 PM

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூன்றே மூன்று தீர்வுகள்; கவியரசு வைரமுத்து

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.3 கோடியை தாண்டி விட்டது. இந்திய அளவில் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவில் இருந்து உலக மக்களை பாதுகாக்க உலக விஞ்ஞானிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தடுப்பூசி கண்டுபிடிக்கவும், மருந்து கண்டுபிடிக்கவும், மில்லியன் கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மூன்றே மூன்று தீர்வுகள் இருப்பதாக கவியரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

vairamuthu,corona virus,solutions,social website,poetry ,வைரமுத்து,கொரோனா வைரஸ்,தீர்வுகள்,சமூக வலைத்தளம்,கவிதை

மூன்றே தீர்வுகள்;
கொரோனா கொல்லுயிரி
தானே அழிவுறுதல்
அல்லது
வருமுன் காக்கவும் வந்தபின்
போக்கவும் மருந்தறிதல்
அல்லது
மழைத்துளிகளின் இடுக்கில்
நனையாமற் பறக்கும் கொசுவைப்போலக்
கொல்லுயிரிக்குச் சிக்காமல்
வாழ்முறை வகுத்தல்.
நான் அறிவியலை நம்புகிறேன்

Tags :