- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிரேக்கப் குறித்து வனிதாவின் மகள் கூறிய கருத்தால் பரபரப்பு
பிரேக்கப் குறித்து வனிதாவின் மகள் கூறிய கருத்தால் பரபரப்பு
By: Monisha Sun, 20 Dec 2020 1:30:38 PM
நடிகை வனிதாவின் வாழ்க்கையில் காதல், திருமணம், விவாகரத்து, பிரேக் அப் என மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில், வனிதாவின் மகள் விவாகரத்து மற்றும் பிரேக் அப் குறித்து பதிவு செய்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை வனிதா காதலித்ததாகவும் இருவரும் இணைந்து வாழ்ந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் திடீரென இருவருக்கும் பிரேக் அப் ஆனது. இது குறித்து வனிதா கூறுகையில், பீட்டர் பாலுடன் இனி வாழ முடியாது என்பதை முடிவு செய்த பின்னர் தான் இருவரும் பேசி பிரிந்தோம். அவர் முதிர்ச்சி அடைந்தவர் என்பதால் அந்த முடிவை ஏற்று கொண்டார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் வனிதாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விவாகரத்து பிரேக்கப் குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- "விவாகரத்து பரவாயில்லை, பிரேக் அப் பரவாயில்லை அதிலிருந்து கடந்து வருவதும் ஓகே தான். ஆனால் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்
விவாகரத்து, பிரேக்கப் குறித்து வனிதா போன்றே அவருடைய மகளும் முதிர்ச்சியாக யோசித்து உள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.