Advertisement

ஸ்பெஷல் பவரை பெற போவது யார்? சண்டையிடும் அர்ச்சனா மற்றும் ஆரி!

By: Monisha Tue, 15 Dec 2020 3:22:30 PM

ஸ்பெஷல் பவரை பெற போவது யார்? சண்டையிடும் அர்ச்சனா மற்றும் ஆரி!

பிக்பாஸ் வீட்டில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதனை பிரச்சனை செய்து விளையாடுவதே போட்டியாளர்களின் எண்ணமாக உள்ளது.

தற்போதைய நான்காவது சீசனில் ஒரு டாஸ்க் கூட சுமூகமாக விளையாடியதாக தெரியவில்லை. அந்த வகையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோழிப் பண்ணை டாஸ்க்கிலும் கோழிகள் அணி மற்றும் நரிகள் அணிகளுக்கு இடையே பிரச்சினை வந்து உள்ளது. குறிப்பாக ஆரி மற்றும் அர்ச்சனா இந்த டாஸ்க் எப்படி விளையாடுவது என்பது குறித்து காரசாரமாக வாதம் செய்து வருகின்றனர்.

special power,archana,ari,ramya,fight ,ஸ்பெஷல் பவர்,அர்ச்சனா,ஆரி,ரம்யா,சண்டை

ஒரு கட்டத்தில் 'எப்படித்தான் விளையாட வேண்டும் என்று சொல்லுங்கள்' என அர்ச்சனா ஆவேசமாக கேட்க 'நான் எப்படி விளையாடுகிறேன் என்று பாருங்கள்' என்று சவால் விடும் வகையில் ஆரி சொல்கிறார். இந்த வாதத்தின்போது ரம்யா மட்டும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். மற்ற போட்டியாளர்கள் வழக்கம்போல் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவருக்கு ஸ்பெஷல் பவர் இருப்பதால் அந்த ஸ்பெஷல் பவரை பெறுவதற்கு அர்ச்சனாவும் ஆரியும் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர்.

Tags :
|
|