Advertisement

காரசாரமான பன்னீர் சாண்ட்விச் பகோடா செய்வது எப்படி?

By: Monisha Tue, 18 Aug 2020 5:05:36 PM

காரசாரமான பன்னீர் சாண்ட்விச் பகோடா செய்வது எப்படி?

இந்த காரசாரமான பன்னீர் சாண்ட்விச் பகோடா, ஒரு மழை நாளில் உங்கள் பெஸ்ட் ஃப்ரெண்ட்.

தேவையான பொருட்கள்
பன்னீர் 300 கிராம்
பகோடா மாவு தயாரிக்க கடலை மாவு 200 கிராம்
சாட் மசாலா 5 கிராம்
உலர்ந்த சிவப்பு மிளகாய் தூள் 5 கிராம்
சன்ஃப்ளவர் ஆயில் 250 மிலி (பொரிப்பதற்கு)
உப்பு தேவைக்கேற்ப
புதினா சட்னி செய்ய (75 கிராம்)
புதினா 1 கொத்து
பச்சை மிளகாய் 2
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை
கடலை மாவில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் போதுமான தண்ணீரைச் சேர்த்து, ஈரமாவாக மாற்றவும். பன்னீரின் துண்டுகளை வெட்டிக் கொள்ளவும். 3 செமீ சதுரங்களாக 1 செமீ தடிமனில் வெட்டிக் கொள்வது நல்லது. பன்னீர் துண்டுகளின் நடுவே கீறி விட்டு, அதில் புதினா சட்னியை நிரப்பி சாண்ட்விச் போலாக்கவும். பன்னீர் சாண்ட்விச்சை கடலை மாவில் தோய்த்தெடுத்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொன்னிறமாக மொறுமொறுப்பாக மாறியவுடன் வெளியே எடுத்து சூடாகப் பரிமாறவும். புதினா அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக சாப்பிடவும்.

Tags :
|