Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் மூலிகைகள்

நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் மூலிகைகள்

By: Karunakaran Thu, 01 Oct 2020 3:51:28 PM

நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் மூலிகைகள்

மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாதவை. இயற்கையானவை. பருவகால வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இவை நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை. மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாதவை. இயற்கையானவை. பருவகால வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இவை நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை.

துளசியை அப்படியே சாப்பிடலாம். துளசியை கொண்டு தேநீர், கசாயம் தயாரித்தும் பருகலாம். பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு பூண்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டு பற்களை அப்படியே சாப்பிடலாம். பாலில் வேக வைத்தும் அருந்தலாம். பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆண்டி வைரல் பண்புகளும் பூண்டுவில் உள்ளது.

herbs,fight,bacteria,infections ,மூலிகைகள், சண்டை, பாக்டீரியா, தொற்று

பெருஞ்சீரகம் நறுமணத்துடன் கூடிய சுவை கொண்டது. வைரஸ் தடுப்பு பண்புகளையும் உள்ளடக்கியது. உடல் வலி, வீக்கத்தை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். தினமும் ஒருவேளையாவது பெருஞ்சீரக தேநீர் பருகி வரலாம். கற்பூரவல்லி:வைரஸ் தொற்றுநோய்களை குணப்படுத்தும் மூலிகையாக வீட்டு வைத்தியங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைரஸ் தாக்குவதை தடுக்க தினமும் ஒரு கப் கற்பூரவல்லி தேநீர் பருகலாம். கற்பூரவல்லியுடன் சில மூலிகைகளை சேர்த்தும் உபயோகிக்கலாம்.

இஞ்சி வைரஸ் தடுப்பு, நோய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தினமும் இஞ்சியை உட்கொண்டால் இன்பளூயன்ஸா, ஆர்.எஸ்.வி, எப்.சி.வி போன்ற வைரஸ்களை நெருங்கவிடாமல் தடுக்கலாம். இருமல், சளி உள்ளிட்ட வைரஸ் நோய் தொற்றுகளுக்கான மருந்துகள் தயாரிப்பதற்கு மிளகுக்கீரையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சாறில் மென்டோல் மற்றும் ரோஸ்மரினிக் அமிலங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. மழைக்காலத்தில் மிளகுக்கீரை தேநீரும் பருகலாம்.

Tags :
|
|