Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் என்ன ?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் என்ன ?

By: Karunakaran Mon, 19 Oct 2020 2:49:47 PM

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் என்ன ?

சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. செம்பு பாத்திரம் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அணுக்கள் சீராக இயங்கத் தொடங்கி, ரத்த சோகை பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். செம்பில் உள்ள ஆன்டி பயாடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டு வலியை குணப்படுத்தும். மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து 4 மணி நேரம் கழித்து பருகலாம். செம்பு பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் செல் உருவாக்கம் அதிகரிக்கும். மேலும், தைராய்டு சுரப்பைச் சீராக்கும். உடலின் மெலனின் உற்பத்தி அதிகரிக்கும்.

மண் பாத்திரங்கள் உணவின் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், அவற்றில் சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாது. மண்சட்டியில் உணவு சீக்கிரமே வெந்துவிடும் என்பதால், உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறாமல் உணவிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவுக்கு ஈடானது என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது.

nature,utensils,cooking,benefits ,இயற்கை, பாத்திரங்கள், சமையல், நன்மைகள்

உலோக பாத்திரங்கள் போல அமிலத்தன்மை பாதிப்பு மண் சட்டியில் இல்லை என்பதால் செரிமான பிரச்சினை ஏற்படாது; உணவுக்குழாய்க்கும் உகந்ததாக அமையும். உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கல் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். மண் சட்டியிலிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப்பொருளில் ஆரோக்கியத்தை சேர்க்கும். மண் சட்டியில் சமைக்கும்போது உணவுப்பொருள் சட்டியில் ஒட்டாது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டியிருக்காது.

புதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்களை 2 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். மண் சட்டியில் உள்ள துகள்களில் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியை தேங்காய் நார் பயன்படுத்தி, சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அலசி வெயிலில் உலர வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை வெப்பமான மண் பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்பதால், ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளை சமைக்கப் பயன்படுத்தலாம்.

Tags :
|