Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிசிஆர் பரிசோதனை செய்த உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா

பிசிஆர் பரிசோதனை செய்த உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா

By: Nagaraj Tue, 27 Oct 2020 9:53:15 PM

பிசிஆர் பரிசோதனை செய்த உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா

கொரோனா தொற்று... இலங்கையில் பேலியகொட மீன் சந்தையில் கொவிட்-19 தொற்று தொடர்பாக பி.சி.ஆர் பரிசோதனை நடத்திய உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் கொழும்பு மாநகரசபையின் சுகாதார பிரிவைச் சேர்ந்த ஒன்பது உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை கொழும்பு மாநகரசபையின் பிரதான பொதுச் சுகாதார பரிசோதகர் ருவான் விஜேமுனி கூறியுள்ளார்.

இதில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உத்தியோகத்தர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

examination,officers,hospital,permission ,பரிசோதனை, உத்தியோகத்தர்கள், மருத்துவமனை, அனுமதி

இலங்கையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சமூக பரவலாக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் பிசிஆர் பரிசோதனைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல் தொற்றாளர்கள் எண்ணிக்கையும் கூடுதலாகி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags :