Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு புதிதாக 1,134 பேர் பாதிப்பு; 9, 781 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனாவுக்கு புதிதாக 1,134 பேர் பாதிப்பு; 9, 781 பேர் சிகிச்சை

By: Monisha Sat, 19 Dec 2020 07:48:30 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு புதிதாக 1,134 பேர் பாதிப்பு; 9, 781 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 1 ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 170 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் கொரோனா தொற்றுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 10
செங்கல்பட்டு - 508
சென்னை - 3,037
கோவை - 1,066
கடலூர் - 89
தர்மபுரி - 96
திண்டுக்கல் - 154
ஈரோடு - 326
கள்ளக்குறிச்சி - 19
காஞ்சிபுரம் - 231
கன்னியாகுமரி - 194
கரூர் - 103
கிருஷ்ணகிரி - 149
மதுரை - 314
நாகை - 108
நாமக்கல் - 209
நீலகிரி - 147
பெரம்பலூர் - 4
புதுக்கோட்டை - 88
ராமநாதபுரம் - 28
ராணிப்பேட்டை - 81
சேலம் - 376
சிவகங்கை - 60
தென்காசி - 37
தஞ்சாவூர் - 130
தேனி - 75
திருப்பத்தூர் - 27
திருவள்ளூர் - 458
திருவண்ணாமலை - 93
திருவாரூர் - 103
தூத்துக்குடி - 123
திருநெல்வேலி - 155
திருப்பூர் - 555
திருச்சி - 156
வேலூர் - 280
விழுப்புரம் - 83
விருதுநகர் - 92
விமானநிலைய கண்காணிப்பு -17

Tags :